அபுதாபியில் நடந்த சங்கீர்த்தன உபன்யாசம்: சத்குரு ஞானானந்த சேவா சமாஜம் ஏற்பாடு
அபுதாபி: சத்குரு ஞானானந்த சேவா சமாஜம் அபுதாபி கிளை சார்பாக பாகவத சிரோமணி டெல்லி ஸ்ரீ நாகராஜ பாகவதர் அவர்களின் சங்கீர்த்தன உபன்யாசம் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சி சமாஜத்தின் புரவலர் ரெங்கராஜன் தலைமையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. அப்போது ஸ்ரீ நாகராஜ பாகவதர் சத்குரு ஞானானந்த சுவாமிகள்; சுவாமி ஹரிதாஸ் கிரி மற்றும் சுவாமி நாமானந்த கிரி அவர்களது குருஞான ரசனுபாவங்களை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்து கூறினார். முதல் 45 நிமிடங்கள் குருஜி சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் தன் குருநாதர் ஞானானந்த சுவாமிகள் மீது கருணை கொண்டு இயற்றிய "ஞான மணி மாலை" பல பாடல்களை பாடி குருபக்தியின் பெருமைகளையும், அதனால் எப்படிப்பட்ட அளப்பரிய சாதனைகளை தனக்கு குருஜி அருளி அனுக்ரஹித்தார் என்று அனுபவப்பூர்வமாக எடுத்து கூறினார்.
ஞானானந்த சேவா சமாஜம் உறுப்பினர்கள் பாகவத சிரோமணி டெல்லி ஸ்ரீ நாகராஜ பாகவதருக்கு மரியாதை செய்து ஆசி பெற்றனர். இறுதியாக பேசிய ரெங்கராஜன் "சத்குரு ஞானானந்த சேவா சமாஜம், ஞான பால விஹார், குருஜி பால நாட்டிய மண்டலி 4வது ஆண்டு விழா வரும் மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தென்னாங்கூர் சுவாமி நிரஞ்சனானந்த கிரி அவர்கள் தலைமையில் அபுதாபியில் நடைபெறும் என்றும் அதற்க்கு ஆஸ்திக பெருமக்கள் வந்து பெருமளவில் கலந்து கொண்டு குருவருளுக்கு பாத்திரமாகும்படி வேண்டி கொள்ளபட்டது". சமாஜத்தின் குழந்தைகள் அமைப்பான "அபுதாபி ஞான பால விஹார்" சிறுவர்களின் பாடலும், மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்த உதவிகள் பல செய்த துபாய் நாராயணன், கிருஷ்ணன் குடும்பத்தினர், அருண், சங்கர் அனைவருக்கும் சிறப்பான நன்றி தெரிவிக்கபட்டது. அபுதாபி சமாஜம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ரெகுநாதன், ஹரிஷ், பாலா, சந்திரசேகர் மற்றும் சமாஜம் உறுபினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications