துபாயில் விமரிசையாக நடந்த 'விவேக் 150'
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் மற்றும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து 'விவேக் 150' எனும் தலைப்பில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழாவை கடந்த 12ம் தேதி அன்று மாலை இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் வெகு விமரிசையாக நடத்தின.
ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில், சுவாமி விவேகானந்தர் இந்தியத் தாயின் மகன்களில் முக்கியமானவர். தனது ஆன்மீக உரையின் காரணமாக சமூக முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர். தனது சிகாகோ உரையின் மூலம் மேற்கத்திய மக்களை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர். இத்தைகைய வீரத்துறவியின் 150வது பிறந்த தினத்தை இந்திய அரசு ஜனவரி 12 முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட இருப்பதாக தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உதய்பூர் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பகவதி பிரகாஷ் தனது உரையில், விவேகானந்தரின் முக்கியக் கருத்தான மனித நேய ஒருமைப்பாடு இன்றைய முக்கியத் தேவை என்றார். இறை நம்பிக்கை, உண்மை, தூய சிந்தனை, தன்னலமற்ற சேவை ஆகியன சுவாமி விவேகானந்தர் இந்தியாவிற்கும், உலகிற்கும் உதிர்த்த முத்துக்கள் என்றார். சிகாகோவில் நிகழ்த்திய தனது ஒரு சொற்பொழிவின் மூலம் உலகை இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் என்றார்.













Click it and Unblock the Notifications