சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திராஷ்டமம் என்றால் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளவர்களுக்காகவே இந்த தகவல்.

கடந்த சில ஆண்டுகளாக சந்திராஷ்டமம் பற்றி பல்வேறு தரப்பினரிடம் பல்வேறு விதமான கருத்துக்கள், யூகங்கள், பயம் போன்றவை நிலவி வருகின்றது. இதனால் சந்திராஷ்டமம் பற்றிய முழு தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஜோதிட வானியல் கலையின்படி மனதை கட்டுப்படுத்தி, அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரனாகும். எப்போது எல்லாம் சந்திரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கின்றாரோ அப்பொழுது எல்லாம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அறிவுத் திறனும், மனோ பலமும் குறையும் வாய்ப்பு உள்ளது என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

எனவே, சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகைய நேரங்களில் முக்கியமான விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளது.

எனவே சந்திராஷ்டம தினத்தில் தேவையின்றி யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யக் கூடாது என்றும், சுப காரியங்களில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்க வேண்டும் என்றும், முக்கிய முடிவுகளையும், ஆலோசனைகளையும் சம்பந்தப்பட்ட ராதசிக்குரிய நபர்கள் எடுத்தல் கூடாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

மேலும் சந்திராஷ்டம தினத்திற்கு முந்தைய தினம், பிந்தைய தினம் என ஆக மொத்தம் மூன்று நாட்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+