எம்பி கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு! அதகளப்படுத்திய அமீரக திமுக!
துபாய் சென்ற திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழிக்கு துபாயில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video
துபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. கடந்த புதன் கிழமை துபாய் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் இன்று மாலை 5 மணிக்கு துபாய் அல் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் எக்செல்சியர் ஓட்டலில் மு. கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் அமீரக திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.