#FathersDay... வராத மகனை மன்னிப்பீர்களா அப்பா...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு உறவுக்கும் ஒரு மகத்துவம் உண்டு. அப்படிப்பட்ட உறவுகளில் உன்னதமானது தாய் - தந்தை உறவு. இந்த உறவுகளைக் காக்கத் தவறுவோர் காலம் முழுவதும் கண்ணீர் சுமந்தபடிதான் வாழ நேரிடுகிறது.

நமது வாசகர் பார்த்தசாரதி, தனது தந்தையுடன் இருக்க வேண்டிய முக்கியமான தருணத்தில் தான் உடன் இல்லாமல் போனது குறித்து மிகுந்த வேதனையுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்த தந்தையர் தினத்திற்காக.

A son's salute to his father

சவூதி அரேபியாவிலிருந்து அவர் அனுப்பியுள்ள கவிதை மடல்...

ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...

இந்த வராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?

சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...

இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?

அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...

ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...

தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக் கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...

எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+