சவுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் நடத்திய ரத்ததான முகாம்
தம்மாம்: சவுதி அரேபியாவின் தம்மாம் மண்டலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனையில் ரத்ததான முகாம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது.
விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் தங்களது சொந்த வேலைகளையும் விட்டுவிட்டு மனித நேயம் பேண காலை 8.00 மணி முதல் அனைத்து சமுதாய மக்களும் ரத்ததானம் செய்ய வரத் துவங்கினர்.
இந்த முகாமில் 160க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் 146 யூனிட் ரத்ததானம் செய்தனர்.
இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் நடத்திய 47-வது ரத்ததான முகாம் ஆகும். முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைகளுக்காகவும் ரத்ததானம் வழங்கப்பட்டு வருகின்றது.
அதிகமானோர் ரத்ததானம் செய்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்தில் இருந்து விருதுகளை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதே போன்று சவுதி அரேபியாவிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.