துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழர் திருவிழா நேற்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் உள்ள சிவன் கோவில் அருகில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் காரல்ஸ் மார்க்ஸ் ஆலோசனைபடி அவை தலைவர் கமால் தலைமையில், பொருளாளர் சதிஷ், துணை செயலாளர்கள் மாரிமுத்து, அம்சத்அலி, செ.சகிலன், நெல்லை தவசி முருகன் , இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், கேப்டன் மன்றம் செயலாளர் சனாசாதிக் ஆகியோர் முன்னிலையில் துபாயில் தமிழர் திருநாள் நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கபட்டது.
இவ்விழாவிற்க்கு நண்பர்கள் மற்றும் கழக சொந்தங்கள் அனைவருக்கும் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் நன்றி கூறினர்.













Click it and Unblock the Notifications