சிறுகதை எழுதுவீர்களா?: இந்த போட்டியில் பங்கேற்கலாமே!
புதுச்சேரி: தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும்.
தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதிக்குள் சிறுகதையை அனுப்பி வைக்க வேண்டும்.

கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி,
முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன் கோயில் தெரு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009 தொலைபேசி எண்:0413-2247072
விதிமுறைகள்:
1. ஏ4 தாளில் 5 பக்கம் கொண்ட குமுகாயக்கதைகள், பிறசொற்கள், பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில் எழுதப்படல் வேண்டும்.
2. கதையின் இரண்டு நகல்களை அனுப்ப வேண்டும். ஒரு நகலில் மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக.
கதையின் எந்தப் பக்கத்திலும் எழுதியவர் பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்'மாத இதழில் வெளியிடப்படும்.
5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.
இரண்டு முதற்பரிசுகள் ரூ. 750.00=ரூ.1500
இரண்டு இரண்டாம் பரிசுகள் ரூ. 500.00=ரூ. 1000
இரண்டு மூன்றாம் பரிசுகள் ரூ. 250.00= ரூ. 500












Click it and Unblock the Notifications