துபாயில் நடந்த பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 19.03.2016 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியையொட்டி உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய விளக்குகள் அணைக்கப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் இதனையொட்டி சிறப்பு நடையோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழக மாணவர் விவேகானந்தன் கடந்த 4 வருடமாக பங்கேற்று வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் அமீரகம் முழுவதும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications