துபாயில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
துபாய்: துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் 20.12.2013 வெள்ளிக்கிழமை மாலை நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
ஹாஜி எல்.ஏ. அப்துல் வாஹிது, ஹாஜி ஏ.எம்.இசட். ஜியாவுதீன், ஹாஜி எம்.ஏ. ஜபருல்லா மற்றும் ஏ.ஏ. ஹாஜி முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர் பேசினார். தமக்கென ஒரு பட்டம் பெறுவதுடன் அதன் பின்னர் பணிபுரிந்து கொண்டு கல்வித்தகுதியினை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துக்கூறினர்.
தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த பூதமங்கலம் ஜமாஅத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பூதமங்கலம் ஜமாஅத்தினர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது ஹோட்டல் கருத்தரங்க அரங்கமா? அல்லது வகுப்பறையா என்று சொல்லும் அளவிற்கு முன்னாள் மாணவர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications