துபாயில் நடந்த 'இந்திர தனுஷ்': ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள இந்திய கன்சுலேட்டில் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்திர தனுஷ் என்ற பெயரில் இந்திய கலை விழாக்கள் நடத்தப்படும் என்று துபாயில் உள்ள இந்திய கன்சுலேட் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்திர தனுஷ் நிகழ்ச்சி இந்திய கன்சுலேட்டில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து வந்த உஸ்தாத் மக்பூல் ஹுசைன் கான் மற்றும் அவரது மகன் ஜீசான் கான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் இசை வெள்ளத்தில் பார்வையாளர்களை நனைய வைத்தனர்.

இந்திய கன்சுலேட் நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திர தனுஷ் நிகழ்ச்சி நடந்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications