நாளை ஷார்ஜா கிராண்ட் எக்செல்சியரில் இஃப்தார் நிகழ்ச்சி: துபாய்-தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் நாளை (4.7.2014) மாலை துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்திர இப்தார் நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள கிராண்ட் எக்செல்சியர்(Grand Excelsior) ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
சிறப்பு விருந்தினராக ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், கல்விக்குழு தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்,

பின்னர் அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் என்.அப்துல் ஹாதி அவர்கள் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்,

அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அமீரக வாழ் தோப்புத்துறை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கத்தின் இஃப்தார் குழுவினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications