இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு டிபி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு, மிக மோசமான காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்தாண்டு மட்டும், இந்தியாவில், 2.7 லட்சம் பேர், இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாகவும், சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கடந்தாண்டில் மட்டும், 4.5 லட்சம் பேர், புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா, சீனா, ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

ஒருவரிடமிருந்து, மற்றவருக்கு, காற்று மூலமாக பரவுவது, காச நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான, தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல் போன்றவை இருக்கும்.

காசநோய் மரணங்கள்

காசநோய் மரணங்கள்

இந்தியாவில் மட்டும், காசநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, கடந்தாண்டில், 2.7 லட்சம் பேர் இறந்து உள்ளனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அதற்கான சிகிச்சையை பெறாமலேயே, இருக்கின்றனர் என்றும், சுகாதார நிறுவனத்தின் ஆய்வு, அடுத்த அதிர்ச்சி குண்டை போட்டுள்ளது.

உலக அளவில்

உலக அளவில்

உலக அளவில்3ல்ஒருவருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, தென்ஆப்பிரிக்க நாடுகளில்தான் டிபியினால் அதிக மரணங்கள் நிகழுகின்றன.

5 நாடுகள்

5 நாடுகள்

இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிக அளவில் டிபி யினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள்-குழந்தைகள்

பெண்கள்-குழந்தைகள்

8.6 மில்லியன் பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 0.5 மில்லியன் குழந்தைகளும், 2.9 மில்லியன் பெண்களும் இந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+