24ல் அபுதாபியில் பொங்கல் விழா: சுகி சிவம் தலைமையில் பட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: பாரதி நட்புக்காக அமைப்பு வரும் 24ம் தேதி அபுதாபியில் தமிழர் திருநாள் விழாவை கொண்டாடவிருக்கிறது.
பாரதி நட்புக்காக அமைப்பு தமிழர் திருநாளான பொங்கல் விழாவை வரும் 24ம் தேதி அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் கொண்டாடவிருக்கிறது.

இந்த விழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இன்றைய வாழ்க்கைமுறை நமக்கு தருவது நிம்மதியே... நெருக்கடியே... என்ற தலைப்பில் நடக்கும் பட்டிமன்றத்தில் பேராசிரியர் ராமசந்திரன், புலவர் ராமலிங்கம், சிவகுமார், மோகனசுந்தரம், டாக்டர் பிரேமா குமார், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் பேசவிருக்கிறார்கள்.
24ம் தேதி மாலை 5.55 மணிக்கு துவங்கும் விழா இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாரதி நட்புக்காக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications