வீட்டு வேலையிலும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பாஸ்!
கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் வீட்டுவேலைகளை பகிர்ந்து கொண்டு செய்தால்தான் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மிசௌரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டு வேலையின் சுமைகளை பகிர்ந்து கொள்வது என்பது ஒருவருக்கொருவர் மீதான பாசத்தையும், அன்பையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டு வேலைகள்
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு வந்து வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே தனியாக செய்தால் ஒருவித சலிப்பும் ஏற்பட்டுவிடும். எனவே வீட்டிற்கு வந்த பின்னரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வேலைகளை செய்யவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளை கவனித்தல்
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதை கவனிக்கும் பொறுப்பு இருவருக்குமே வேண்டும் என்கின்றனர். அப்பொழுதுதான் கணவன், மனைவி இருவருக்குமே குழந்தைகள் மீது ஒரு ஒட்டுதல் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பாசப்பிணைப்பு
தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பு அதிகரிக்கும் போது மனைவிக்கும் சந்தோசம் அதிகரிக்கிறது. இதனால் தம்பதியரிடையே மகிழ்ச்சியும் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சின்னச் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்
இதுபோன்று குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சின்னச் சின்ன அட்ஜஸ்ட்மென்டுடன் நடந்து கொண்டாலே குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications