ஷார்ஜாவில் நாளை துவங்கும் சர்வதேச புத்தக கண்காட்சி: அப்துல் கலாம், கமல் ஹாஸன் பங்கேற்பு
ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் உள்ள எக்ஸ்போ சென்டரில் 32வது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நாளை துவங்கும் இந்த கண்காட்சி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்புத்தக கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி துவக்கி வைக்கிறார். இக்கண்காட்சியில் 53 நாடுகளில் இருந்து 1,010 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 405,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் இடம்பெறும். இந்தியா உள்பட பல நாடுகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.
போர்ச்சுகல், நியூஸிலாந்து, ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முதல் முறையாக இக்கண்காட்சியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் http://www.sharjahbookfair.com/portal/6769572f-5b1a-46e5-8102-7a2c5ba4089d.aspx என்ற இணையதளத்திற்கு செல்லவும்.












Click it and Unblock the Notifications