குருசரணின் “ஸ்ராவ்யம்” இசை நிகழ்ச்சி- துபாயில் இன்று மாலை நடைபெறுகிறது
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இன்று தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
"ஸ்ராவ்யம்" என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகரான சிக்கில் குருசரண் இசைமழையில் ரசிகர்களை நனைக்க இருக்கின்றார்.

ஷேக் சயாத் ரோடு, எமிரேட்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியின் அருகில் அமைந்துள்ள எமிரேட்ஸ் தியேட்டரில் இன்று மாலை 6 மணியளவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இளைய தலைமுறைப் பாடகர்களில் தற்போது அதிக கவனத்தைப் பெறுபவர் குருசரண். சிக்கில் சகோதரிகள் நீலா-குஞ்சுமணியின் பேரன். இவர், இசைச்சுடர், யுவகலாபாரதி, நாத ஒளி எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை கர்நாடக இசை உலகில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: ரமேஷ் விஸ்வநாதன் - 0505865375












Click it and Unblock the Notifications