சீனாவில் தாலியன் தமிழ் பிணையம் சார்பில் தீபாவளி திருநாள்
சீனா வாழ் தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
தாலியன் தமிழ் பிணையம் (சீனா) சார்பில் அக்டோபர் 21-ந் தேதியன்று தீப ஒளி திருநாள் கொண்டாடபட்டது.
தாலியன் வடகிழக்கு சீனாவில் ஒரு அழகிய நகரம். வடகொரியா எல்லைக்கு அருகில் இந்நகர் அமைந்துள்ளது.

இந்நகரத்தில் தாலியன் தமிழ் பிணையம் இவ்வாண்டு பொங்கல் அன்று அந்நகரில் வசிக்கும் தமிழர்களால் துவங்கப்பட்டது. பொங்கல், சித்திரை திருநாளுக்கு பின்னர் தீப ஒளி திருநாளை முன்னிட்டு இவ்வருடத்தின் மூன்றாவது ஒன்றுகூடல் நிகழ்வை பிணைய ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் லுவுசன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மற்றும் தாலியனில் வசிக்கும் தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த ஆண்டில் தாலியன் தமிழ் பிணையம் சார்பில் தமிழர் நலன் குறித்த ஆலோசனை கருத்துக்கள், தமிழகத்தில் இயற்கையை பேனும் திட்டங்களுக்கு நிதி அளித்தல், விவசாயிகளுக்கு நிதி உதவி, சல்லிகட்டு ஆதரவு விழிப்புணர்வு இணையதளப் பிரச்சாரங்கள் என்று பல்வேறு விடயங்களை முன்னெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிரவன் குமார் குருராசன்
தொடர்பு: watsapp - +919841288279
சீனா எண் - +8613079893052












Click it and Unblock the Notifications