துபாயில் உதவும் கரங்கள் அமைப்பு நடத்திய சேவை தினம்
துபாய்: துபாயில் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் சேவை தினம் 04.10.2013 அன்று மாலை ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடைபெற்றது.
சேவை தினத்தையொட்டி மரம் நடுதல், மது மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் முஹம்மது ராஷிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எம்.பி.எம். பொது மேலாளர் பி.எம்.எஸ்.ஹமீத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில், பள்ளியில் படிக்கும் பருவத்தில் உதவும் கரங்கள் எனும் அமைப்பினை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முனைந்திருக்கும் இவர்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த சமூகத்தை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிப்பர் என்றார். மாணவர்களின் இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
சிறப்பு விருந்தினர் பி.எம்.எஸ். ஹமீத் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மது மற்றும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. அதனை தொழிலாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது, பாலரசு, அப்துல் ரவூஃப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications