மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்! உ.பி முதலமைச்சர் யோகி பேச்சு
லக்னோ: மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் உத்தரப் பிரதேச பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. எனவே யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதனையடுத்து பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரச்னைகளில் யோகி அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அவர், "மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் முதன்மையான பணி" என்று கூறியுள்ளார். கோரக்நாத் கோவிலின் மஹந்த் திக்விஜய்நாத் ஸ்மிருதி பவனுக்கு வெளியே மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், "மக்களின் பிரச்சினைகள் உரிய நேரத்தில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும். சில நேரங்களில் இதற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டாலும், நிரந்தர தீர்வுதான் அரசின் நோக்கம்.
நான் இருக்கும் வரை நமது மாநிலத்தில் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு சிலர் தங்களின் மின் கட்டணம் குறித்து கோரிக்கை மனுவை அளித்திருக்கிறீர்கள். அவர்களுடைய மனு பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அதேபோல மருத்துவ சிகிச்சை குறித்து பலரும் மனு அளித்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications