ஒரு புன்னைகை பூவே..
கடற்கரை மணலில்
நீ பதித்த
கால் தடங்களை
அஜந்தா ஓவியமென நினைத்து
அழியாமல் பாதுகாக்கிறேன்..
தெரு வழிச் சாலைகளில்
என் மீது நீ வீசிய பார்வைகளை
மோட்சத்தின் முகவரியென்று
முந்தானை முடிச்சுகளில்
முடிந்து வைத்திருக்கிறேன்..
பிறந்த நாள் வாழ்த்து அட்டையில்
என் பெயருக்கு
நீ தந்த அழுத்தத்தில்
புதைந்து கிடந்த உன் காதலை
புரியாமல் கண்டெடுத்தேன்..
பள்ளி விடுமுறை நாட்களில்
உன் பார்வை படாத நான்..
சூரியன் தொடாத மலராய்
சுருங்கிப்போனேன்..
எனக்குள் எப்போதும்
ரத்தினக்கம்பளம் விரிக்கும்
உன் நினைவுகள்..
ஊனமானகிப்போன என் கனவுகளை
ஊர்ஜிதப்படுத்தும்..
புத்தகங்களை சுமக்கும் பூவே..
அந்த அணைப்பின் நெருக்கத்தில்
என் அன்பையும் சேர்த்துக்கொள்..
உயிரை தவணை முறையில்
உடனே எடுத்துச்சொல்..!!
- அபிரேகா அலாவுதீன்([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.