திண்ணை!!
கரையும் காகங்கள் அல்ல
உறைந்துபோன உன் நினைவுகள்
உருக்கியெடுத்த உன் கனவுகள்
கலைத்திருக்கும் என் காலை உறக்கத்தை.
இமை பிரித்ததும்
என் கண்முன்னே தெரிவது
உன் புன்னகையொன்றே......
எனவே இனி
எனனெதிரே நீ வராதே!
ஒலிக்கும் தொலைபேசி ஒலியெல்லாம்
உன் குரல் அழைப்பாய்....
எடுத்த உடன் சொல்கிறேன்
உன் பெயரொன்றையே!
ஆதலால் நீ
அழித்துவிடு
எண்ணை....
என்னை....
உன் தோழி
உனக்கு பிடித்த பாடல்
உன் கவிதைகள்
இவையாயும
நான்குபுறம் பிணைந்த சங்கிலிகளாய்
நிஜக்கடலில் நான் நீந்தவிடுவதில்லை
தோழி மாற்று....
பாடல் மற....
கவிதை எரி....
இவையெல்லாம் செய்தேனென்றே
எனக்கொரு கடிதம் எழுது
உன் நினைவுகளை தட்டியெழுப்பாத
கடலில் இருண்ட ஆழத்தில்
கடிதம் புதைக்கிறேன்!
இறுதியாக
உன்னை தீண்டி சிலிர்த்த விரல்கள்,
உன் நெருக்க சுவாசத்தில்
உனக்கும் கேட்க
துடித்த இதயம்,
உன் கண்களில் வழிந்த
வெட்கம் பருகிய என் கண்கள்
உன் ஆடை அணிந்து
உன்னை தழுவியதாய்
தகித்த என் தேகம்
எல்லாவற்றையும் சிதைத்து
என் காதல்
எரித்து விடுகிறேன்!
பின் என்னை நான்
கொலை செய்த குற்றத்திற்காய்
மரண தண்டனையென தீர்பெழுதி
என் கடைசி கவிதை
காற்றில் அலைந்திருக்கும்!
- பாஷா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications