For Daily Alerts
Just In
புரியாத புதிர்- சந்தர் சுப்பிரமணியன்
எல்லாவற்றிலும் நீயாக
நீயே எனக்காக
எல்லாமே எனக்காகுமா இறைவா?
இது எந்தன் பேராசையோ?
கல்லாகி நின்றாலும்
கருவாக இருக்கின்றாய்
கருவாகி என்னுள்ளே-என்னை
கருவியாய் மாற்றிவிட்டாய்!
சொல்லாமல் சொல்கின்றாய்!
சொல்லாமல் கொல்கின்றாய்!- நீ
எல்லாமாய் எனக்காக- இவை
எல்லாம் எனக்காகுமா?
முள்ளாக நான் ஆனால்
கண்ணாக நீ ஆவாய்-
கண்ணாக நான் ஆக
முள்ளாகி முளைக்கின்றாய்!
என்னாலும் புரியாத புதிரே
என்றாலும் எனக்கேன் நீ எதிரே?
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]