கூஸ் முனுசாமி
இரு மாநிலத்தலைவலி
இருபது வருட டிமிக்கி
நூற்றுக்கணக்கில் கொலைகள்
பல்லாயிரம் யானைவேட்டை
லட்சக்கணக்காய் சந்தனமரக்கொள்ளை
பல கோடிகள் பதுக்கல்
ஆட்கடத்தல்
அதிரடிக்குண்டு
கண்ணிவெடி
காட்டுராஜா
கூஸ்முனுசாமி
அதிரடிப்படையால்
சல்லடையாக்கப்பட்டார்.
கதறியழும் அக்காள்
மயங்கிவிழும் மனைவி
பரோலில் வந்திருக்கும் அண்ணன்
பாவமறியா மகள்
" அப்பாடா... நல்லவேளை தப்பிச்சோம்
அவன வாயத் தொறக்கவுடாம...
போட்டுத் தள்ளிட்டாங்க " என்ற
மகிழ்ச்சியில்
பலபேர்......
வீரப்பன்கள் காட்டுக்குள் இல்லை.
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:1. முடிவற்ற...
2. சூல்
3. குட்டிச் சாமியாருக்கு...
4.நாக்குகள்
5. தளை
6. தீர்க்கமும் தரிசனமும்
7. இப்படிக்கு தங்கபாண்டி...
8. கற்பூரவாசனை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications