கற்பூரவாசனை
அப்பொழுதுதான்
புதிதாய்
சுடச்சுட
எழுதி
முடித்திருந்த
என் கவிதையை
உன்னிடம்
முதலில்
காண்பிப்பதற்கான
உயிர் ஆவலுடன்
அதன் மடிப்பு
கலையாமல்
எடுத்து வந்தேன்.
நீயோ,
உயிரற்ற
உணர்வுடன்
அதை
வாங்கி
வைத்துக்கொண்டு
"ம்... துணிகளுக்கு
இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறேன்"
என்றாய்.
நான்
கசங்கிப்போனேன்
என் கவிதை
அழுக்காகிக்கொண்டிருந்தது......
--------- நெப்போலியன், சிங்கப்பூர்
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. முடிவற்ற...
2. சூல்
3. குட்டிச் சாமியாருக்கு...
4.நாக்குகள்
5. தளை
6. தீர்க்கமும் தரிசனமும்
7. இப்படிக்கு தங்கபாண்டி...
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications