நான் யார்?
Subscribe to Oneindia Tamil
"நீ வந்த இடம் கால்"
"அதை மட்டுமே நீ பார்"
ஆதிக்க வார்த்தைகள் கேட்டு,
ஆண்டுகளின் கணக்கறியா,
எமது மதங்கள் சுமத்திய
மாய சுமையறிந்தே கூனிய
முதுகு உன் தலையை
நிமிராது அழுத்தி பிடித்தது
எம் பெரியவர்கள் மூலம்.
ஆம் சிகிச்சையில்லா மூலம் தான் -- அவர்கள்
மானிடத்திற்கு.
சுமந்தது என் இடது தோள்
இதுகாறும் முப்புரிநூல் மட்டும் அன்று
அதனூடாக ஈராயிரத்தின் கழிவுகளை.
எண்ணிச் சுமையென உணர்தல் கண்டேன்
எண்ணியபடி தீயில் சுட்டெரித்தேன்.
தீயே நீதான் என்னில் இறங்கு-- காட்டு
நான் யாரென எனக்கும்,
தான் யாரென அவர்களுக்கும்.












Click it and Unblock the Notifications