காற்றில் ஓர் கடிதம்
கண்ணில் நீர் வருகுதடி என்
கண்ணம்மா- கடலடித்து கரைத்த
காரைச் சுவரோரம்
கலங்கி நின்ற உன்னைக்
காண்கையிலே
பருவம் எய்தியவளா? இல்லை
இந்த அமளியின் அதிர்ச்சியில்
உறைந்துதான் போனவளா?
உன்ணை அன்பாய் அணைத்து
ஆதரவாய் வளர்க்க ஆசைதான்
ஆனால் அதற்கான பொருள
ஆதாரங்கள் ஏதுமின்றி
அடிநெஞ்சிலிருந்து வரும் அழுகையும்
அது வடிக்கும் கண்ணீரும்- சேர்த்து
ஆண்டவனிடம் உனக்கான இரைஞ்சுதலோடு
எனதிந்த சேலைகள்
உனக்கே கிடைக்க வேண்டி- என்
உள்ளுயிரை அதில் பொதிந்து
உதவும் கரங்கள் உதவியால்
உனக்கு அனுப்பியிருக்கிறேன்,
உடுத்திக் கொள்....
என் மகளே
இப்பவும்...... நம்பிக்கையில் தானடி வாழ்க்கையே....
(சுனாமி நிதி திரட்டும் காட்சியோவியத்தில் கண்ட சின்ன பெண்ணுக்காக)
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.