For Daily Alerts
Just In
கலையும் கலை
கண்களின் திரையில்
கலைந்த மேகத்தில்
தொலைந்த சிற்பத்தால்
சிதைந்து தவிக்கிறது
விழிப்பு
கடக்கும் காலம்
கடந்த காலத்தின்
உயிர் நீட்டம் நான்.
என்னுள் கரையும் காலம்
கால்களைப் புதைத்துச் செல்லும்
கடற்கரை அலையென
பின்னகர்கிறது
காலக் குழுப்பத்தில்
தடம் பதித்து நகர்கிறேன்
- அனுக்ரஹா (mailto:[email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:09 [IST]