அனிச்சைத் தேடல்கள்
Subscribe to Oneindia Tamil
-அனுக்ரஹா
இருளில் தலையணையை
இறுக்கியபோது,
கதகதப்பான புடவை ஸ்பரிஸமும்,
அரவணைக்கும்
கண்களின் தாலாட்டும்
மறைந்தது
உறுத்துகிறது.
வார்த்தைகளால்
சுருங்கும் முகங்கள்,
குழந்தைப் பருவம்
செய்த மாயங்கள்
மறைந்ததென்றது...
ஜன நெருக்கடியில்
மூடிய கண்கள்,
என்றோ தொலைந்த,
நட்சத்திர இரவுகள்
கற்பனையால்
மீளுவதும்
கடினமென்றது.
தனிமையில்
புன்னகைக்கும்
முகம்,
என்றோ ரசித்த
பாடல்களைப்
பிரதிபலிக்கின்றது.
நினைவுகளில்
மூழ்கும்போது
நிகழ்காலம்
நினைவிற்கு வருகிறது,
ஒரு சின்ன அதிர்ச்சியாக!
-அனுக்ரஹா([email protected])












Click it and Unblock the Notifications