பெண்ணே
- எஸ்.தியாகராஜன்
கொள்வாய் என்றிருந்தேன்,
கொல்கிறாயடி பெண்ணே!
நிற்கையிலும், நடக்கையிலும், தூங்கி
விழிக்கையிலும் உன் நினைவு.
பூவிலும், காற்றிலும், நான் விடும்
மூச்சிலும் உன் வாசம்.
பெண்ணே!
உன்பார்வை எந்தன் உந்து சக்தியா,
இல்லை எனை சாய்க்கும் உத்தியா?
மலரினும் மெல்லியதாம் காதல் - காதல்
வலி அறியாதான் சொல்லியது போலும்.
துருதுருக்கும் உன் விழிகள், என் மனத்
துருபோக்கும் வழிகள்.
தாஜ்மஹால், காதலின் உச்சம், நாமிருவர்
உண்மைக் காதலின் மிச்சம்.
இதயமாற்று சிகிச்சை அறிவியல் கண்டுபிடிப்பா?
யார் சொன்னது!
அது காதலின் விந்தை.
காதலின் விதை.
காதல் காதல் காதல் - காதல் போயின்
சாதல் சாதல் சாதல், என்றான் பாரதி.
திருத்தி சொல்கிறேன், கேள்.
காதல் காதல் காதல் "உன்" காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
தீயிறங்கவும் சம்மதம்,
அணைக்க நீ வருவாய் என்றால்.
தோற்கவும் சம்மதம், தோற்பது
உன்னிடமென்றால்.
பெண்ணே!
என்னை அடிப்பதாய் இருந்தாலும், உன்
உதடுகளால் அடி.
திட்டுவதாய் இருந்தாலும் தமிழால்
திட்டு.
- எஸ்.தியாகராஜன் ([email protected])












Click it and Unblock the Notifications