For Daily Alerts
Just In
மனமே நீ ஒரு தீர்க்கதரிசி!!!
- சபரி
அரை கால் சட்டையில் அரை சாண் கிளிசல்
ஒரு வேளை சோற்றில் ஒரு கை கல்லு
யதார்த்ததையும் தாண்டி மனதில் ஒரு கனவு
ஒரு காது இல்லாத பை, பல பக்கம் இல்லாத புத்தகம்
சட்டம் இல்லாத பலகை, பட்டன் இல்லாத சட்டை
இயல்பை மறந்து ஏனோ மனம் மட்டும் வானில்
உணவு மறந்த வயிறு, வார் அறுந்த செருப்பு
நெடு நேர வெயில் பயணம், பையில் புத்தகமும் தட்டும்
நெஞ்சில் மட்டும் வருங்கால கனவின் களியாட்டம்
அரை வயிறு கஞ்சியில் கரை புரண்ட கண்கள்
காலம் போட்ட பிச்சை- கல்லூரி வாசல்
மனம் என்னவோ தினம் ஒரு கனவு காணும்
மீண்டும் மீண்டும் சலவை செய்த அதே சொக்காய்
காலை முழுதாய் மூட வழியில்லாத தோல்கள்
கனவு மட்டும் மவுனமாய் மனதில் ஆர்ப்பரிக்கும்
சாதிக்கும் மனமே நீ ஒரு தீர்க்கதரிசி!!!
- சபரி (mailto:[email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:09 [IST]