காத்திருக்கேன் கடலோரம்-ரிஷி சேது
Subscribe to Oneindia Tamil
காலோரம் அலைபாய
பாவாடை மேலுயர்த்தி
பாந்தமாய் நீ விலக
துடிக்குதடி
எம்மனசு
துள்ளி வரும் அலையாட்டம்....
கண்ணோர சாடையிலே
சாயங்கால திட்டமெல்லாம்
அழகாக நீ சொல்ல
மெல்லவிலகுதடி
என் நெஞ்சு உனைநோக்கி....
நோகாமல் நீ சொன்ன
வார்த்தையெல்லாம்
மொத்தமாய் சேர்த்துவெச்சேன்
வசனமாய் எழுதிவெச்சேன்
நொடிமுள்ளு
மணிமுள்ளாய் ஆனதென்ன?
மணி முள்ளு
முள்ளாய் போனதென்ன?
மழைபோயி வெயில் வந்து
வெயில் போயி
மழை வந்து....
இப்படி நகராமல்
போனதென்ன
ஆயிரம் சொல்லியென்ன
ஆர்வமாய் பேசியென்ன
அவபோயி நாளாச்சு
பொதச்ச எடம்
காடாச்சு
காடெல்லாம்
முள்ளாச்சு....
காத்திருக்கேன்
கடலோரம்
அலை வரும் போகும்
அவ கால் தொட்ட அலை
என் கால் மோத
துடிக்கும் என் மனசு
அவ தொட்ட அலையாட்டம்....












Click it and Unblock the Notifications