தெய்வ சுமை
Subscribe to Oneindia Tamil

முன்னெப்போதும் இல்லா ஒரு
அனுபவம்
முட்படுக்கையில் கிடக்கையில்
கிடைத்திருக்கும் பீஷ்மருக்கு....
ராமர் தீக்குளிக்க சொன்னபின்
கிடைத்திருக்கலாம் அவ்வனுபவம்
சீதைக்கு....
மோட்சேயின் கட்டளைகளுக்கு
ஆபிரகாமின் பிள்ளைகள்
வேறு அனுபவமுரைத்தனர்...
ஏசுவின் மரணச்சிலுவை
அனுபவித்திருக்கும்
தெய்வ சுமையை...
ஒவ்வொருமுறையும்
அனுபவித்திருக்கும்
இருத்தலின் அவஸ்தையை
பொதுஜனம்...
-ரிஷி சேது([email protected])












Click it and Unblock the Notifications