'பஞ்ச' பண்டவர்கள்!
Subscribe to Oneindia Tamil

-முத்தாசென் கண்ணா
எத்தன மொற ஏறுழுதும்
எள்ளுளுந்து வெளையலையே
எட்டி எட்டிப் பாத்தாலும்
ஒசந்த மானம் கருக்கலையே
கொளம்பு ஊத்துன சோறெல்லாம்
கொழுத்துப் போன ஜனங்களுக்குத்தான்
எத்தினி வருசம் கடந்து போனாலும்
ஏழைக்கு எப்பவுமே எள்ளுருண்டைதான்
ஒத்த வேல கஞ்சி ஊத்தி
கட்ட உசிர புடிச்சு வெச்சிருக்கோம்
இப்படியே ரெண்டு நா கடந்தா
இருக்கப்போறது ஒடம்பு மட்டும்
ஓடையெல்லாம் வத்திப்போச்சு
இந்த கூழாங்கல்லுக சாகலியே
திங்க மணல தேடினாலும்
லாரி போக நிக்கலியே
இதே கேள்விய நாங்களும்
எத்தினி நாளா கேட்டுகிட்டிருக்கோம்
இப்பவாவது உண்மைய சொல்லுங்க
எப்பத்தான் எங்களுக்குத் தை பொறக்கும்?
-முத்தாசென் கண்ணா ([email protected])












Click it and Unblock the Notifications