மன்னிப்பு
-சபரிநாதன் கோவிந்தன்
மனிதாபிமானம்,
இறையருள்
கருணையின் ஆழ்ந்த அனுதாபம்
அபிமானத்தின் மணி மகுடம்
அனுதாபத்தின் உச்சக்கட்டம்
இறையன்பின் உத்தமம்
நிஜத்தின் கனவு
தனிமையின் மவுனம்
நெஞ்சின் நெகிழ்ச்சி
உயர்ந்த பண்பு
ஒழுக்கத்தின் நாகரீகம்
உண்மையின் ஆருயிர்
பண்பின் பகுத்தறிவு
நெறியின் நேர்மை
சமாதானத்தின் சந்தோஷம்
அன்பின் தானம்
அடக்கத்தின் அஸ்த்திவாரம்
அறிவியலின் ஆன்மீகம்
வீரத்தின் விடாமுயற்சி
நல்லவர்களின் எளிமை
கடவுளின் நிழல்
இறைவனின் மறு உருவம்
உன்னத தானம்
அறிவின் எழுச்சி
ஆனந்தத்தின் அடைமழை
மானிடத்தின் பிடிவாதம்
இயற்கையின் எழில்
இன்பத்தின் எல்லை
அகம்பாவத்தின் அருமருந்து
இல்லறத்தின் விளக்கு
உலகத்தின் சமாதானம்
உயர்ந்தோரின் உற்றத் தோழன்
சான்றோரின் சகவாசி
பண்டிதனின் பெருந்தன்மை
பாமரனின் அறியாமை
தாய்மையின் அடையாளம்
குணத்தின் விடாமுயற்சி
குழந்தையின் மனம்
பெண்மையின் மென்மை
இதயத்தின் கருணை மனு
கடவுளை காண இது ஒரு வழி
இறைவன் அளித்த ஆறாவது அறிவு
மனிதா மன்னிக்க,
மனம் இல்லையோ இனியும் உனக்கு....
-சபரிநாதன் கோவிந்தன் ([email protected])