For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழியாத காதல் கதை . . .!

Google Oneindia Tamil News

அருகருகே அமைந்த கிராமம் தான்
எனக்கும் அவளுக்கும் . . .
எல்லோருக்குள்ளும் மலர்ந்தது போலவே
எனக்குள்ளும்
அரும்பு காதல் . . .
அழகாய் பூத்து
காலத்தால் உதிர்ந்து போன - என்
கதை தான் இது . . .

A poem of unforgettable love

உயர் நிலை பள்ளிக்கு
மிதி வண்டி பயணம்
ஒத்தையடி பாதையில் . . .
அவளின்
யதார்த்தமான சந்திப்பு . . .
ஒரு சில நிமிடங்களில்
பரிமாறி கொண்ட
பார்வைகள்
வாரம் நகர்ந்தும்
மறந்து போகாத அந்த நிமிடங்கள் . . . திரும்பவும்
அவளின் ஓர பார்வைக்காகவே
மிதி வண்டியை உருட்டிக்கொண்டு
செல்லும் அளவிற்கு வந்து விட்டது . . .
ஆம்
எனக்குள்ளும் பருவ கால மாற்றம் . . .
அவளுக்கும் அப்படி தான் . . .
என்றோ ஒருநாள் விடுப்பில்
இருந்து மறுநாள் சென்றபோது
அவள் விழியின் விசம்பல்களில். . .
தெரிந்துகொண்டேன் . . .
இங்கு வசன உச்சரிப்புகள் இல்லை
தோழிகள் ஜாடை சொல்லும் வாக்கில்
சங்கதி சொல்வதும்
பார்வையும் சிரிப்பும் மட்டுமே
எங்களுக்கான வாசகங்கள் . . .
அப்போதெல்லாம் ஆணும் பெண்ணும்
பேசுவது என்பது
ஊராரின் பார்வையில் மட்டும் அல்ல
என்குல பெண்களுக்கும் தெய்வ குத்தம் தான் . . .
எட்டி நின்று பேசுவது கூட எட்டாத நிலை தான் . . .
என் காதலுக்கு வார்த்தை தான் இல்லை
ஆனால் கண்களின் மொழியும்
மயிலிறகு குட்டியும்
அவ்வப்போது தூது போனது
சில சமயம் தீபாவளி
பொங்கல் வாழ்த்து
அட்டைகளும் இடம் பெயரும்
இடம் மாறிக்கொண்ட எங்கள் இதயம் போல . . .
அதில் கூட அவள் பெயரோ
என் பெயரோ பொறிக்கப்படவே இல்லை . . .
ஆனாலும் அவள் பெயரை
முணுமுணுக்காத நேரமே இல்லை. . .
அறியாத வயசு
வலி தெரியாத உன் நினைவுகள்
வசந்தமாய் உணர்ந்தேன் . . .
பள்ளி படிப்பு முடிந்து பிரிந்தாலும்
நம் உறவுக்கு பிரிவில்லை என்ற ஒரு உணர்வு . . .
இன்று வகுப்பின் கடைசி நாள்
நம் சந்திப்பின் கடைசி நாள்
என்று தெரியாமல் கூட
உன் கண்ணை வெகு நேரம்
பார்த்து ரசித்து கொண்டிருதேன் . . .
யார் கண்பட்டதோ . . .
கல்லூரி படிப்புக்கு நீயும் நானும்
வேறு வேறு திசைகளில்
அப்போது தொடர்பு கொள்ள வசதியும் இல்லை
கடிதத்தை தவிர . . . ஆனால் அதும் முடியவில்லை . . .
பிரிவோம் என்று தெரியாமல் கூட
நம்மை பிரித்து வைத்தது காலம் . . .
காலம் உருண்டது . . .
கல்லூரி படிப்பை முடித்து
உன்னை காண
மிதி வண்டி எடுத்து வந்து
உன்னை காணாமல்
கண்கலங்கி நின்ற உணர்வுகள்
இன்று நினைத்தாலும்
கண்கள் கலங்கி தானடி போகிறது . . .
இன்று
நீயும் நானும் தூரம் தூரம் தான் . . .
ஆனால் . . .
அந்த ஒத்தையடி பாதையில்
நம் காதலின் கால்தடம் அருகருகே
அழியாத சுவடாய்
இருந்து கொண்டு தான் இருக்கிறது . . .

- ரகு, சென்னை

English summary
A poem of unforgettable love by our reader Raghu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X