ஆவி மரத்தை முத்தமிட்டு!
Subscribe to Oneindia Tamil
பசியடங்காத குஞ்சுகள்
வாய் திறக்க ஆரம்பித்தன
வாய்திறத்தலின் ஓசை
வனமெங்கும் கேட்டது
உம்மிக்குருவிகள் நம்மை
பார்த்துவிட்டன என்றே
வெட்கம் போர்த்தி எழுந்தனர்

உம்மிக் குருவிகளுக்கும்
நம் காதல் தெரிந்திருக்கிறது
ம்..... ஆவிமரம் கூட
இவ்வளவு நேரம் அசையவில்லையே
ஆவி மரத்தை முத்தமிட்டனர்
முத்தத்தின் சத்தம் கேட்டு
உம்மிக்குருவிகள்
சிறகடித்துப் பறந்தன
சில்லென்று விசிறத் தொடங்கியது
ஆவிமரம்....!!!
- சோலச்சி












Click it and Unblock the Notifications