பைநாகப்பாம்பே பைந்தமிழை இழித்தாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் தமிழ்நாடுடையோன் அனுப்பிய கவிதை

A Reader's poem on Anti- Tamils

பைநாகப்பாம்பே பைந்தமிழை இழித்தாய்
ஐநாகம் அழித்தார் அவரே தமிழ்தான் படித்தார்
ஆழ்வார் தமிழ் படிக்க ஆழ்ந்தார் திருமாலே
பாரளந்த தமிழை பழித்ததனால் விடப்பாம்பே
கார்மேனிச் செங்கண் தமிழ் கருப்பன் மாயோன்-உன்
தூர்மேனி மேலினி தூங்கமாட்டான்
ஆயிரம் நாவோடு அநியாயப் பொய் பேசாதே
துர் நாற்றம் துரத்த துளபம் எடுப்போம் தூர ஓடிவிடு!
பதற்றத்துடன் இனி பற்ப நாபன் அரவே
உன்மேல் இனி அறவே படான்
நஞ்சாய் நீ கக்கியதே நால்வேதம் என்றவன் நாடறியச் சொல்லிவிட்டான்
நரித்தந்திர நால்வருணம் என்னும் புறத்தோல் உரிக்க உரிக்க வளர்வதினால்
எரித்தே விடுவதென்று எம்பெருமான் முடிவெடுத்தான்
நீல கண்டனுமே உன்னை கண்டம் விட்டு துண்டம் செய்ய கங்கணம் கட்டிவிட்டார்
முப்பாட்டன் முறுகனுமே முறுக்கேறி வருகின்றான்
பாம்பே தப்பாட்டம் ஆடாதே மயில் பசிக்கு இரை செய்வார்
உடையவரும் உன்னை திருத்தத்தான் நினைத்தார்
உடையாரும் முன்னம் உடைவாளெடுத்து எச்சரித்தார்
படையல் என எங்கள் அன்னை தமிழ்ப் பாவை படித்தார்
பறைஎடுத்து ஆண்டாள் உங்கள் பசப்பை எல்லாம் உடைத்தார்
நூலைப் படித்தவர்கள் நுட்பம் தெளிகின்றார்
வாலை நறுக்கி வதம் செய்ய வாளை எடுக்கும் முன்
வாலை சுருட்டி மீண்டும் வனத்துக்கே ஓடிவிடு

- தமிழ்நாடுடையோன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+