உலக சுற்றுசூழல் தினம்.. கருப்பை வரை குடைந்து கட்டிடங்களாக்கினோம் !

Subscribe to Oneindia Tamil

மரம், செடி ,
கொடிகளெல்லாம்
பூமியின் சுகப்பிரசவதால்
பிறந்தவை

நாம்
அவளின் கருப்பைவரை குடைந்து
கட்டிடங்களாக்கினோம் !

Poem on World Environment Day

விதைத்தால் மரமாகும்,
பிளாஸ்டிக்கை புதைத்தால்
மண்ணும் மலடாகும் !

இலைகள் சருகானதால்
உரமானது .
இன்று
ரசாயனமே உரமானதால்
உணவே விஷமானது .

நிறமில்லா
நீருக்கும்
சாயமேற்றினோம் !

சிட்டுக்குருவியின்
சிறகுகள் கொடுத்து
செல்போன் சிக்னல் வாங்கினோம் !

கவிதை எழுதக்கூட
காகிதம் தேடாதீர்
எங்கோ
ஓர் மரம்
உயிர்வாழட்டும்
நம் சந்ததிக்காக .

மனிதா
சுற்றுசூழலை
நாம் காக்காவிடில் ,
பூமியும்
பொறுமை இழக்கும்
தானே தொடங்கும்
பணியை
தன்னை ''மறுசுழற்சி செய்வதற்காக ''..

--கோ. சௌந்தி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+