தண்ணீர் என்னும் உயிர் நீர்

Subscribe to Oneindia Tamil

-சுஜாதா ஜெயராமன்

நம்மை காக்க
நாம் காக்க வேண்டியது தண்ணீர்
பணத்தை தண்ணீராக செலவழி என்று
சிலேடையாக சொல்ல முடியாது இன்று
தண்ணீரை பணம் போல் சிக்கனமாக செலவழி
என்னும் நிலைமைதான் உலகெங்கும்
தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை
இருண்ட கண்டம் கண்டு புரிந்து கொள்வோம்

World Water day poem by Sujatha Jayaraman

அந்நாளில் நீர்நிலைகளை
உயிரென காத்தனர் மன்னர்
இந்நாளில் ஏரிமூடி வீடு கட்டி
பணம் பார்க்கிறார் பொன்னர்
இருக்கின்ற நீர் நிலைகளில்
நெகிழி குப்பை கூளம்
தெருவெங்கும் நெகிழி குடம்
வரிசையான கோலம்
வெட்டிய பசுமை இட்ட சாபம்
கொட்டிடும் மழை வேண்டி யாகம்
வெட்டிய பசுமையால்
பூமியே வெப்பமாகும் சோகம்
வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து
உயிரை நீரின்றி வாட்டுகிறது ஒன்று சேர்த்து
இப்போதாவது விழித்து கொள்வோம்
நீரின்றி பசுமையில்லை
பசுமையின்றி நீரில்லை
முடிவெடுப்போம் மரம் வளர்ப்போம்
இருக்கும் நீராதாரத்தை உயிராக காப்போம்
இல்லையேல் நாளை தண்ணீருக்காக
மானிடர் ஒருவரையொருவர்
அடித்து கொல்ல நேரும்
தண்ணீர் என்றும் உயிர் நீர்
வீணாகும் ஒவ்வொரு சொட்டு நீரும்
எங்கோ ஓர் உயிரை காக்கும்
இருக்கும் நீரை
சிக்கனமாய் செலவு செய்வோம்
நீர் வளம் பெருக்குவோம்
நீர் வளம் காப்போம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+