தண்ணீர் என்னும் உயிர் நீர்
-சுஜாதா ஜெயராமன்
நம்மை காக்க
நாம் காக்க வேண்டியது தண்ணீர்
பணத்தை தண்ணீராக செலவழி என்று
சிலேடையாக சொல்ல முடியாது இன்று
தண்ணீரை பணம் போல் சிக்கனமாக செலவழி
என்னும் நிலைமைதான் உலகெங்கும்
தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை
இருண்ட கண்டம் கண்டு புரிந்து கொள்வோம்

அந்நாளில் நீர்நிலைகளை
உயிரென காத்தனர் மன்னர்
இந்நாளில் ஏரிமூடி வீடு கட்டி
பணம் பார்க்கிறார் பொன்னர்
இருக்கின்ற நீர் நிலைகளில்
நெகிழி குப்பை கூளம்
தெருவெங்கும் நெகிழி குடம்
வரிசையான கோலம்
வெட்டிய பசுமை இட்ட சாபம்
கொட்டிடும் மழை வேண்டி யாகம்
வெட்டிய பசுமையால்
பூமியே வெப்பமாகும் சோகம்
வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து
உயிரை நீரின்றி வாட்டுகிறது ஒன்று சேர்த்து
இப்போதாவது விழித்து கொள்வோம்
நீரின்றி பசுமையில்லை
பசுமையின்றி நீரில்லை
முடிவெடுப்போம் மரம் வளர்ப்போம்
இருக்கும் நீராதாரத்தை உயிராக காப்போம்
இல்லையேல் நாளை தண்ணீருக்காக
மானிடர் ஒருவரையொருவர்
அடித்து கொல்ல நேரும்
தண்ணீர் என்றும் உயிர் நீர்
வீணாகும் ஒவ்வொரு சொட்டு நீரும்
எங்கோ ஓர் உயிரை காக்கும்
இருக்கும் நீரை
சிக்கனமாய் செலவு செய்வோம்
நீர் வளம் பெருக்குவோம்
நீர் வளம் காப்போம்












Click it and Unblock the Notifications