குழப்பம்
நேசமுள்ள தோழி தேவிக்கு...!
நலம், நலமே விழைகிறேன். நான் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போதெல்லாம் உன்னிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பதேஎன் வழக்கம் என்பதை நீ அறிவாய். இப்போதும் மிகப் பெரிய குழப்பத்தில்தான் எழுதுகிறேன்.
என்னுடன் அலுவலகத்தில் பணிபுயும் ஒருவருடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. இருவரும் மனம் விட்டு பேசி திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்தோம். இந்தத் தருணத்தில் என்னுடைய தந்தையார் இறந்து விடவே வயதான தாயையும், வயது வந்ததங்கையையும் கரைசேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொருளாதார பற்றாக்குறையினால் உறவினர் ஒருவரிடம் உதவி நாடிப் போனேன். அவரோ, தன் மகனை திருமணம் செய்துகொள்வதாயிருந்தால் உதவுகிறேன் என்றார். குழப்பத்தோடு வீடு திரும்பிய வேளையில் தன் தம்பி மகனுக்கு என்னை மணம்செய்து கொடுக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருந்தாள் என் அம்மா.
மன அமைதிக்காக பக்கத்திலுள்ள பூங்காவிற்கு சென்றேன். அங்கு நம்முடன் கல்லூரியில் படித்த ராஜனைச் சந்தித்தேன். படிக்கும்காலத்தி-ருந்தே என்னைக் காத-லிப்பதாகவும், சொல்லத் தயங்கியதாகவும் நல்ல வேலையில் செட்டில் ஆகி நிறையசம்பாதிப்பதாகவும் சொன்னான். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவிரும்புவதாகவும் சொன்னான். பலமுறை என்னை சந்திக்கமுயற்சித்தும் முடியவில்லை என்றான்.
மறுநாள் எம்.டி.யின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதால் குழப்பத்துடன் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டேன்.ஏர்போர்ட்டி-ருந்து நேராக அலுவலகம் வந்த எங்கள் எம்.டி.யின் மகன் என் அழகில் மயங்கி விட்டதாகவும், என்னை மணந்துகொண்டு தன்னுடன் வெளிநாடு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் மேனேஜர் சொன்னார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னுடைய குழப்பத்திற்கு நீதான் ஒரு முடிவு சொல்ல வேண்டும்.
நான் எந்த விமானத்தில் வெளிநாடு செல்வது நம்முடைய இந்தியன் ஏர்லைன்சிலா? அல்லது வெளிநாட்டு விமான சர்வீசிலா?
இப்படிக்கு
உன் அன்புத் தோழி சுதா.
- மன்னை பாஸ்கர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications