Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

Subscribe to Oneindia Tamil

கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005

நூல் அறிமுகம்

எய்ட்ஸ்: ஓர் உயிரியல் ஆயுதப்போர்
மருத்துவர் வீ.புகழேந்தி.
வெளியீடு: சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு
225கி. நேரு தெரு, ஜீவா நகர்
புதுப்பட்டினம், காஞ்சிபுரம்-603 102
விலை ரூ. 8.

எய்ட்ஸ் அமெரிக்காவினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்

Emerging Viruses: AIDS. Ebola; Nature, Accident or intentional’’ என்கிற ஆய்வு நூலில் Dr.Leonard G.Horauiltz, எய்ட்ஸ்கிருமியின் உருவாக்கத்தில் பின்புலத்தில் இருந்தவர் முன்னாள் அமெரிக்க உள்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும்,மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், 10 மில்லியன் டாலர்கள்அமெரிக்க அரசாங்கப் பணத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதியுள்ளார்.

AIDSஇந்த ரகசிய எய்ட்ஸ் கிருமி உருவாக்கும் திட்டத்திற்கு MkNAOMI எனப் பெயரிடப்பட்டது எனவும், (Negroes are only MomentaryIntividuals NAOMI) இத்திட்டத்தின் முழுக்கட்டுப்பாடும் சி.ஐ.ஏ. துணையுடன் கிஸ்சிங்கர் மற்றும் சில விஞ்ஞானிகளின் கையில்இருந்ததையும் தெளிவாக எழுதியுள்ளார்.

AIDS- An Explosion of the Biological time Bomb?’எனும் புத்தகத்தில் எய்ட்ஸ் கிருமிகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதற்கானஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என தெளிவுபடுத்தியுள்ளார்.

Cleveland எனும் செய்திப்பத்திரிகை எய்ட்ஸ் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கிருமி என்பதற்கு அரசு பதிவேடுகளில் மறுக்க முடியாதஆதாரங்கள் உள்ளன. என செய்தி வெளியிட்டுள்ளது.

London Times பத்திரிகையானது பின் வருமாறு கூறுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் ஆப்பிரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் கிருமிகலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எய்ட்ஸ் பரவியது. இத்தடுப்பூசிக்கு பின்னரே எய்ட்ஸ் நோய் அங்கு கொள்ளைநோயாக மாறி மக்களைப் பாதித்தது. (London Times மே 11, 1987)

1979ல் பென்டகன் மையத்தின் Dr. Mac Arthur என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்டஎச்.ஐ.வி. வைரஸ் அமெரிக்காவில் வெறுக்கப்படும் சிறுபான்மையினரான ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்கு தெரிந்தும்தெரியாமலும் பரிசோதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை தடுப்பூசி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பரப்பப்பட்டது. அத்திட்டம்பரிசோதிக்கப்பட்ட Manhatten எனும் இடத்தில்தான் உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் அதிகம் இருந்தார்கள் எனதெரியவந்தது.

Dr. William Cambell Douglass என்பவர் தனது Who Murdered Africa எனும் அறிக்கையில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கஎய்ட்ஸ் கிருமி 1974ல் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டது என்பதையும், ஆப்பிரிக்காவில் பெரியம்மை தடுப்பூசியில் தெரிந்தேஇக்கிருமி கலக்கப்பட்டதே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவக் காரணம் என்பதை விளக்கியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்யா பெண்மணி வங்காரி மாத்தாய் பின்வருமாறு கூறுகிறார்:

உண்மையைச் சொன்னால் உயிரியல் ஆயுதப் போருக்காக சில விஞ்ஞானிகளால் சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்எய்ட்ஸ் வைரஸ். இதன் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகள் உயிரியல் போர் முறையைத்தான் இனி பயன்படுத்துவார்கள். இனி துப்பாக்கிகள்கற்கால மக்களுக்கு மட்டுமே என்பதை நாங்கள் அறிவோம்

யார் எய்ட்ஸ் கிருமியை திட்டமிட்டு உருவாக்கி பரப்பினார்களோ அவர்களே அதற்கு சிகிச்சையளிக்க மருந்துகளும் கண்டுபிடித்து அதன்மூலம் கொழுத்த இலாபத்தையும் பெற்று வருகிறார்கள்.

1986ல் சோவியத் நாடு, எய்ட்ஸ் வைரஸ் அமெரிக்க உயிரியல் போர்முறை வளாகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி என செய்தி வெளியிட்டுஉலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது உடனே பொய்ப் பிரச்சாரம் என மறுப்புச் செய்திகள் வந்தன. இரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளும்அத்தகைய உயிரியல் உத்திகளில் ஈடுபட்டதாலும், அமெரிக்க கிருமி உருவாக்கத்தில் இரஷ்ய விஞ்ஞானிகளுக்கும் பங்குண்டு என்பதாலும்,அக்குற்றச்சாட்டை ரஷ்யா பின்னர் எழுப்பவில்லை.

மேற்கண்ட தகவல்களோடு மேலும் பல விளக்கங்களைக் கொண்டு 24 பக்க சின்னஞ்சிறு நூல் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளரிடம் மஞ்சள் காமாலை தடுப்பூசி மூலமும், ஆப்ரிக்காவில் பல மில்லியன் அப்பாவி மக்களிடம்பெரியம்மை தடுப்பூசி மூலமும் பரிசோதிக்கப்பட்டது எய்ட்ஸ் என்பதை அறியும்போது நம் நாட்டில் யார் யாரோ வாரி வழங்கும்தடுப்பூசிகளை பயன்படுத்துவது நமக்கு பயமேற்படுத்துகிறது.

டாக்டர் புகழேந்தியின் இந்நூல் ஆய்வுக்குரியது. அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.

- ஜே. ஷாஜஹான்

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு

தமிழில் அருகிப் போன அங்கத நடை கதை சொலல்பாணி எழில்வரதனின் இச்சிறுகதைத் தொகுப்பெங்கும் அடர்ந்து கிடக்கிறது. சிக்கெடுக்க இயலாதபின்னலுக்குள் கிடக்கும் மனித வாழ்வைக் கூட வாய்கொள்ளாச் சிரிப்புடனும் கிண்டலான சலிப்புடனும் விவரித்துப்போகிற கதையோட்டம் தமிழுக்கு வெகுபுதிது.

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கடந்த பிப்ரவரி 6 அன்று எழுத்தாளர்கள்பிரபஞ்சன், பாவண்ணன், சி.மோகன் மற்றும் பதிப்பாளர் சந்தியா நடராசன் ஆகியோர் பங்கேற்புடன் ஒசூரில் நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+