AI: சாட் ஜிபிடி-யிடம் இதையெல்லாம் கேட்டால் ஜெயில் கன்பார்ம்.. மறந்தும் ஏஐ-யிடம் கேட்க கூடாத கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பயனர்கள் கேட்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு நமக்கு எதிர்முனையில் உட்கார்ந்து பதில் சொல்வது போல கடகடவென பதில் அளிப்பது பயனர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. அதேவேளையில் சாட் ஜிபிடியில் சில விஷயங்களை தேடினால் உங்களுக்கு சட்ட ரீதியில் பெரும் சிக்கல்கள் வந்து சேரும் எனவும், கைது கூட செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திவிட்டது. மனிதர்களின் பல மணி நேர வேலையை கூட சில வினாடிகளில் செய்து முடித்து விடுகிறது. ஏ.ஐ எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் இணைய தேடுபொறியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

AI Chatbot Artificial Intelligence

ஏ.ஐ. பயன்பாடு

கூகுளில் போய் சியர்ச் செய்யும் காலம் எல்லாம் குறைந்துவிட்டது. தற்போதுள்ள தலைமுறையினர் சிறிய கூட்டல், கணக்குகளை கூட உடனடியாக சாட் ஜிபிடியில் போட்டு விடையை கண்டுபிடித்து விடுகிறார்கள். மனிதர்களின் பல வேலைகளை சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு துறைகள் விழுங்கிவிடும் என்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். அதை நிரூபிப்பது போல ஏ.ஐ. பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தற்போதே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது.

தற்போதைய 2K கிட்ஸ்களின் செல்போனில் தற்போது தவிர்க்க முடியாத செயலியாக சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ. செயலிகள் உள்ளன. இதன் பயனர்கள் பல கோடிகளை தாண்டியுள்ளது. ஏதாவது சிறிய தலைவலி வந்தால் கூட உடனே சாட் ஜிபிடியிடம் கேட்டு பயனர்கள் விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.

ஏ.ஐ. செயலிகளும் பயனர்களின் கேள்விகளுக்குத் தேவையான விவரங்களை அளிக்க கொடுப்பதோடு, மேற்கொண்டு என்ன மாதிரியான தரவுகள் வேண்டும் என்பதை அதுவே கேட்டு வழங்குகிறது. சாட் ஜிபிடியில் மேலும் புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. சாட் ஜிபிடி வருகை காரணமாக பல வேலைகளும் எளிதாகிவிட்டன.

வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் அளிக்காது

பயனர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு எதிர்முனையில் ஒரு நபர் உக்காந்து போலவே பதிலளிப்பதால், பயனர்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. அதேவேளையில் சாட் ஜிபிடியில் சில விஷயங்களை தேடினால் உங்களுக்கு சட்ட ரீதியில் பெரும் சிக்கல்கள் வந்து சேரும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.-யைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்காது. அதாவது, பயனர்கள் கேட்கக் கூடிய சில வில்லங்கமான கேள்விகளுக்கு பதிலளிக்காதவண்ணமே அது ரெஸ்டிரிக்ட் (restricted) செய்யப்பட்டுள்ளதாம்.

ஜெயில் தண்டனை கிடைக்கும்

இதுபோல சாட் ஜிபிடியிடம் தற்கொலை, வெடிகுண்டை எப்படி உருவாக்குவது, குழந்தைகள் துன்புறுத்தல் உள்ளிட்ட கேள்விகளை கேட்கக்கூடாது. மீறி கேட்டால் அடுத்து கம்பிதான் எண்ண வேண்டியிருக்கும். உலகம் முழுக்க உள்ள அரசு அமைப்புகள் ஏ.ஐ. செயலிகள் சட்டவிரோத செயல்பாடுகள் எதுவும் இருக்கிறதா என கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

இதனால், இஷ்டத்திற்கு வரம்பு இன்றி எதையும் கேட்கலாம் என நினைத்து கேட்கக் கூடாது என்று அத்துறையின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+