"எச்சரிக்கை.." AI சீக்கிரமே வெடிக்கும்.. யாராலும் தடுக்கவே முடியாது.. பில் கேட்ஸ் கொடுத்த வார்னிங்
சியாட்டில்: சர்வதேச அளவில் பல ஏஐ நிறுவனங்கள் படுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் இது ஒரு பப்பிள் போல உருவாகிவிட்டதாகவும் இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் இது தொடர்பாகச் சில முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி முதலீடுகள் ஏஐ பக்கம் சென்றுள்ளன. இப்போது அனைத்து முதலீட்டாளர்களுமே ஏஐ சார்ந்த நிறுவனங்களிலேயே முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏஐ
அதேநேரம் இந்த ஏஐ பப்பிளாக உருவெடுத்து வருவதாகவும் அது எப்போது வேண்டுமானாலும், வெடிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது ஏஐ நிறுவனங்களில் அளவுக்கு அதிகமான முதலீடுகள் போய் இருப்பதால் அது ஆபத்தாக மாறலாம் என எச்சரித்துள்ளனர். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இது குறித்துத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பில் கேட்ஸ்
அபுதாபியில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், அதிக மதிப்பீடுகளைக் கொண்ட பல ஏஐ நிறுவனங்களால் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது என்றும் இது ஏஐ பப்புளை உருவாகக்கூடும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும், "AI துறை மிகவும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது. ஏராளமான நிறுவனங்கள் ஒரே மாதிரியான யோசனைகளுடன் வருகிறது. அந்த நிறுவனங்களில் முதலீடுகளும் வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏஐ ரேஸில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வெற்றியாளர்களாக வெளிவரும்.. பல நிறுவனங்களால் தங்கள் மதிப்பீடுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது.
சீக்கிரம் வெடிக்கும்
பல நிறுவனங்களுக்கு வரும் காலத்திலும் இதே மதிப்பு இருக்கும் என சொல்ல முடியாது. எனவே, முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்குத் தயாராக இருக்க வேண்டும். சில ஏஐ நிறுவனங்கள் மிக அதிக வேல்யூவேஷன்களை கொண்டுள்ளன. ஒட்டுமொத்த மார்கெட்டை விடச் சில ஏஐ பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதை நாம் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏஐ நல்லது
அதேநேரம் இங்கு நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். AIஐ ஒரு தொழில்நுட்பமாக வரவேற்கிறேன். அது மனிதர்களுக்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இது மிக முக்கியமான விஷயம். சமூகத்தில் அதன் தாக்கம் மிக பெரியதாக இருக்கும். குறிப்பாகச் சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் AI அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவர முடியும். AI-ன் நன்மைகள் நிஜமானவை மற்றும் தவிர்க்க முடியாதவை.
AIஐ சுற்றி நடக்கும் பிஸ்னஸ் மற்றும் முதலீடுகளையே நாங்கள் எச்சரிக்கிறோம். நிறுவனங்கள் சரியான பிஸ்னஸ் மாடல்களை வைத்திருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். 2026க்கு பிறகு AI நிறுவனங்கள் பொறுப்பான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.. AI என்ற பெயரை வைத்து கொண்ட சும்மா வேல்யூவேஷன்களை அதிகரித்து முதலீடுகளைப் பெறுவதை மட்டும் நோக்கமாக வைத்திருக்கக்கூடாது. அதை ஒரு நல்ல பிஸ்னஸ் மாடலாக இந்த நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்" என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications