சாட்ஜிபிடியிடம் இந்த விஷயத்தை எல்லாம் பகிராதீங்க.. நாங்க பொறுப்பு இல்லை.. கைவிரித்த ஏஐ
டெல்லி: ஏஐ எனப்படும் சாட்ஜிபிடி பயனர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எந்த ஒரு சந்தேகம் எழுந்தாலும் உடனே சாட்ஜிபிடியிடம் கேட்டு அதற்கான பதிலை பெறுகிறார்கள். இந்த நிலையில் சில விஷயங்களை பகிரக் கூடாது என்றும், மீறி பகிரப்படும் தகவல்கள் வெளியில் கஷிந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது என ஏஐ சாட்ஜிபிடி கூறியுள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைய உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸின் குரோக், கூகுளின் ஜெமினி உள்ளிட்ட பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் தற்போது சந்தையில் உள்ளன.

சாட்ஜிபிடி ஆதிக்கம்
இதில் சாட்ஜிபிடியே பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எந்த ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் உடனே சாட்ஜிபிடியிடம் கேட்டு தெரிந்து கொள்வதை இன்றைய ஜென் சி தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். சின்னதாய் தலைவலித்தால் கூட அதற்கு என்ன காரணம் என ஏஐயிடம் கேட்டு மண்டையை குழப்பிக்கொள்வார்கள்.
காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து தினமும் குறைந்தது இரவில் தூங்க செல்லும் வரை இடையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு சாட்ஜிபிடியே பலருக்கும் கை கொடுக்கிறது. அலுவலகத்தில் ஏதேனும் டவுட் என்றால் கூட உடனே சாட்ஜிபிடியை தட்டி அதை தெரிந்து கொள்கிறார்கள்.
இதையெல்லாம் பகிர வேண்டாம்
ஏஐ தளங்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ.. அதே அளவிற்கு கட்டுப்பாடு இன்றி அனைத்து விவரங்களையும் அதில் கேட்டு பெறுவது தேவையற்ற குழப்பங்களுக்கும் சிக்கலுக்குமே வழிவக்கும் என்கிறார்கள் அத்துறை நிபுணர்கள். இதற்கிடையே, சாட்ஜிபிடியிடம் சில தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று சாட்ஜிபிடியே கூறியுள்ளது.
எவையெல்லாம் பகிரக் கூடாது
* கிரெடிட் கார்டு
* வங்கி விவரங்கள்
* வீட்டு முகவரி
* போன் நம்பர்கள்
* பாஸ்வேர்டுகள்
* மருத்துவ விவரங்கள்
* மருந்து சீட்டுக்கள்
* சட்ட பிரச்சனைகள்
* வழக்கு விவரங்கள்
* தனிப்பட்ட குடும்ப / உறவுப்பிரச்சனைகள்
* பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள்,
* வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் ரகசிய தகவல்கள்,
* சட்ட விரோத செயல்களுக்கான வழிமுறைகள்,
* பிறரது தனிப்பட்ட விவரங்கள்
பல சிக்கல்கள் எழக்கூடும்
இணையத்தில், பொதுவெளியில் பகிர தயங்கும் எந்த ஒரு விஷயத்தையும் சாட்ஜிபிடியிடமுமே பகிர வேண்டாம் என்று சாட்ஜிபிடியே கூறியிருக்கிறது. ஏனெனில் இதுபோன்ற தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படும் போது பிறருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைத்தால் தனிப்பட்ட விவரங்களால் பல சிக்கல்கள் எழக்கூடும். அதனாலாயே இதுபோன்ற தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications