குற்றம் நடக்கும் முன்பே கணித்து சொல்லும் AI.! இனி ஒரு தப்பு கூட நடக்காது.. அசத்தும் பிரிட்டன் அரசு
லண்டன்: இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பிரிட்டன், குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணிக்கும் ஏஐ டூலை உருவாக்கி வருகிறது. இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் குற்றங்கள் நடக்கும் முன்பே அதைச் சரியாகக் கணித்துத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறி வருகிறது. ஜாலியாக பேசுவது முதல் கார்ப்பரேட் ஆபீஸ்கள் வரை, எல்லாப் பக்கமும் ஏஐ நமக்கு உதவியாக வருகிறது. இது மருத்துவ ஆராய்ச்சி முதல் போக்குவரத்து அமைப்புகளை ஒழுங்குபடுத்துவது வரை மிகப் பெரிய மாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது.

ஏஐ மேப்
இதற்கிடையே பிரிட்டன் அரசு இதை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. அதாவது குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடக்கும் முன்னரே கணிக்கவும் உதவும் வகையில், ஏஐ அடிப்படையிலான குற்றத் தடுப்பு அமைப்பை உருவாக்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் விரிவான, ரியல் டைம் க்ரைம் வரைபடத்தை உருவாக்கும். குற்றங்கள் எங்கு நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்த ஏஐ அமைப்பு துல்லியமாகக் கணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு சம்பவங்கள் பெரிய குற்றமாக மாறுவதற்கு முன், அதிகாரிகள் தலையிட உதவும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் மேப்பிங் முறைகளை ஒருங்கிணைத்து இந்த முறை செயல்படும். போலீஸ் பதிவுகள், உள்ளூர் கவுன்சில்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்து டேட்டாவை எடுத்து அதை வைத்து இந்த ஏஐ மேப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
துல்லியமாக கணித்து சொல்லும்
கடந்த காலங்களில் குற்றங்கள் எங்கே எப்போது நடந்தது என்பதை வைத்தும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோரின் நடத்தையைக் கண்காணித்தும் இந்த லிஸ்ட்டை உருவாக்கப் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கத்தி உட்பட வன்முறை தாக்குதல்கள், திருட்டு மற்றும் சமூக விரோத நடத்தை போன்ற குற்றங்களை முன்கூட்டியே கண்டறியும்.
இந்தத் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தத் திட்டத்திற்கு 4 மில்லியன் பவுண்ட்டை பிரிட்டன் அரசு முதலீடு செய்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மாடல்களை ஏப்ரல் 2026க்குள் உருவாக்குவதே இவர்களின் இலக்காக இருக்கிறது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
இது குறித்து பிரிட்டன் போலீஸ் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் கூறுகையில், "இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றங்களைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட உதவும் AI டூலை உருவாக்க நாங்கள் முதலீடு செய்கிறோம்" என்றார். இதற்கு முன்பும் பிரிட்டனில் க்ரைம் மேப்கள் இருந்துள்ளன. ஆனால், அந்த மேப்களில் குற்ற சம்பவங்கள் நடந்த பிறகு அது மேப்பில் வரும். ஆனால், இந்த ஏஐ டூல் குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணித்து மேப்பில் காட்டுமாம்.
இது முதல்முறை இல்லை
அதேநேரம் குற்றத் தடுப்பில் ஏஐ பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் இதே போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டன. இருப்பினும், ஏஐ டூல்கள் எப்போதும் கடந்த கால போலீஸ் டேட்டாவை வைத்தே முடிவெடுக்கும். இதனால் அங்கு ஏஐ டூல்களை பயன்படுத்தும்போது இனப்பாகுபாடு அதிகம் இருக்கிறதாம். மேலும், அதன் வெற்றி விகிதமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்காகக் குற்றப் பிரிவில் அனைத்து ஏஐ டூல்களும் தோல்வி என சொல்ல முடியாது. நெதர்லாந்தின் குற்ற அமைப்பு ஓரளவுக்கு நல்ல சக்சஸ் ரேட்டை கொண்டிருக்கிறது. அதேபோல டென்மார்க்கிலும் மோசடி வழக்குகளைக் கையாள்வதில் ஏஐ டூல்கள் முக்கிய பங்காற்றியுள்ளது. இப்படி கலவையான முடிவுகளே இருப்பதால் பிரிட்டன் ஏஐ மேப் எப்படி இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications