குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பலன்.. பார்வையால் திருமண யோகம்.. யாருக்கு திடீர் லக் தேடி வரும்
சென்னை: குருபகவான் செவ்வாய் வீடான மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். டிசம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பிறகு அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் திருமண சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி: குரு பகவான் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்வார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ரிஷப ராசியில் கார்த்திகை, ரோகிணி மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பயணம் செய்வார். குருப்பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கும். வேலையில் புரமோசனும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு வீடு, மனை, வண்டி வாங்கும் யோகத்தையும் ஏற்படுத்தும்.

அஸ்வினி: குருப்பெயர்ச்சியினால் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தைகள் பிறக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு பதவி உயர்வும், வேலை செய்யும் இடத்தில் இடம் மாற்றமும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.
பரணி: குருபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும் புது வீடு கட்டுவது, வண்டி வாகன சேர்க்கை நடைபெறும்.
கார்த்திகை: குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கார்த்திகை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள்.
ரோகிணி: இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி, செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மிருகஷீரிடம்: நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புது வீடு கட்டுவீர்கள். கடன்கள் அடைபடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும்.
திருவாதிரை: பண வரவு அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகம் நன்மைகள் நடைபெறும். மூத்த, இளைய சகோரதரர்கள், சகோதரிகள் உதவி செய்வார்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுப விரைய செலவுகள் வரும்.
புனர்பூசம்: வேலை கிடைப்பதில் இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வுடன் பணியிட மாற்றமும் கிடைக்கும்.
பூசம்: குரு பகவான் பண வருமானத்தை தரப்போகிறார். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமையும். குடும்பத்துடன் வெளியூருக்கு உல்லாச பயணம் செல்வீர்கள். உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். லாப குருவினால் இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் கவலைகள் நீங்கும்.
ஆயில்யம்: வெளிநாடு சென்று பணி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியினால் அதிக நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
மகம்: சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இளைஞர்கள், இளம் பெண்கள், திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. செல்வமும், செல்வாக்கும் தேடி வருகிறது. குரு பார்வை பலமாக உள்ளது புது வீடு கட்டலாம். வீடு கட்ட மனை வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பூரம்: குரு பார்வை குதூகலத்தை தரப்போகிறது. திருமணத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணம் செய்தவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும்.
உத்திரம்: நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் . 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குருவின் துணையால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: 2024ஆம் ஆண்டு முதல் உங்களின் வெற்றி அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணம் வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரும்.
சித்திரை: நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருந்த தடைகள் நீங்கும், குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். நிதி வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது.
சுவாதி: பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது. கடன்கள் தீரும். தன தான்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
விசாகம்: 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உங்களுக்கு குரு பார்வை கிடைக்கப்போகிறது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். அலுவலகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதையும் வெளிப்படையாக கூடி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
அனுஷம்: வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். முன்னோர்கள் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் ஆலோசனையை தவறாமல் கேளுங்கள். காதல் விசயங்களில் கவனம் தேவை.
கேட்டை: குருவின் அருளினால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கப்போகிறது. சுப செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
மூலம்: சுப விரைய செலவுகள் நடைபெறும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் அகலும் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வண்டி, வாகனம் வாங்கலாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
பூராடம்: பண வருமானம் அதிகரிக்கும். கடன்கள் அடையும். நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். சுப காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். உடல் நிலையில் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில்கள் தொடங்க முயற்சி செய்யலாம்.
உத்திராடம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும் காலம் வந்து விட்டது. செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வருமானம் கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
திருவோணம்: பொன்னான தருணம் இது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உங்கள் ராசிக்கு குரு பார்வை கிடைக்கிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வழக்குகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் குறையும். கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும்.
அவிட்டம்: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஜெயமாகும். திருமண தடையை நீக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியம் வெற்றி பெறும் வரை தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பணம் யாருக்கும் கடனாக கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை சச்சரவில் ஈடுபடவேண்டாம்.
சதயம்: குரு பகவான் அருளால் அனைத்து நன்மைகளும் நடக்கப் போகிறது. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை. இடம் பொருள் அறிந்து பேசினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க கவனமாக இருக்கவும்.
பூரட்டாதி: 2024ஆம் ஆண்டு முதல் துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்டது. பணப்பிரச்சினைகள் தீரம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க நேரிடலாம்.
உத்திரட்டாதி: 2024 ஆம் ஆண்டு நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் வாழ்வில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். பெற்றோரின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
ரேவதி: குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் சுப விரைய செலவுகளை ஏற்படுத்தும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். காரியத்தடைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications