Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு வேணுமா வீடு இருக்கு.. கார் வேணுமா கார் இருக்கு.. துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் பொற்காலம்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி ஆகிப் போகிறார். அதே நவம்பர் மாதத்தில் கடகத்தில் இருந்து மீண்டும் மிதுனத்துக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். இதுவே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவர் தேவர்களுக்கெல்லாம் தேவர். பிள்ளைப் பேறு, திருமணம், செல்வம், செழிப்பு என அனைத்து நல்ல விஷயங்களுக்கும் காரணகர்த்தாகவாக இருக்கிறார்.

guru-athisara-peyarchi-thulam-rasi-people-get-lots-of-money-during-this-period

சனியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி குரு. சனி பகவான் என்றாலே பொதுமக்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் உண்மையில் குருவைக் கண்டுதான் அச்சப்பட வேண்டும். குரு என்பவர் ஞானக்காரகர். தர்மத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மட்டுமே குரு பகவான் உதவி செய்வார். குரு என்பவர் வளர்ச்சியைக் கொடுப்பார். ஆனால் அதனை நிதானமாகவே கொடுப்பார் அதுவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் நிகழும்.

அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆனதால் மிகச்சிறப்பான பலன்கள் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பீர்கள். நாங்கள் எதிர்பார்த்தவை நடக்கவில்லை என்று நினைக்கலாம். கிரக நிலைகள் காரணமாக ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் இருந்து கொடுக்க வேண்டிய பலன்கள் உங்களுக்கு தடைபட்டது. இந்த அதிசார பெயர்ச்சி மூலம் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க போகிறது.

உத்யோகம்

தடைபட்ட பலன்கள் எல்லாம் அடுத்தடுத்து வேகமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிரமங்கள் வந்து கொண்டே இருக்கும். உத்யோகத்தில் ஏராளமான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும். மனதிலும் வீண் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். இப்போது நீங்கள் துன்பங்களில் இருந்து விடுபட போகிறீர்கள். உத்யோகத்தில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் தூள் தூளாகும். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

முன்னேற்றம்

மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுபகாரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு வீடு தேடி நல்ல செய்தி கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் எடுத்து தடம் பதிப்பீர்கள்.

சொந்த வீடு

சொந்த வீடு கன நனவாகும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். வண்டி, வாகனம், ஆபரணம் உள்ளிட்ட அசையும், அசையா பொருட்களின் சொத்து சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் பெருகும். மனக்கவலைகள் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்

வெளியூர், வெளிமாநில, வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இது உங்களுக்கு கிடைத்த பொற்காலம். இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறவிட வேண்டாம். உங்கள் வீட்டு அருகில் உள்ள அம்மன் கோயில் சென்று மஞ்சள் நிற வஸ்திரம் தானமாக வாங்கிக் கொடுத்து தரிசனம் செய்வதால் நல்ல பலன்களை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+