Guru Peyarchi 2026: உச்ச குருவால் மிதுன ராசிக்கு அற்புத யோகம்.. தொழில் தொடங்கும் யோகம்
2026 ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த உச்ச குருப்பெயர்ச்சியால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, அதிர்ஷ்டம் ஏற்படுமா என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, பணம், திருமணம், குழந்தை பாக்கியம், ஆன்மீகம், அதிர்ஷ்டம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமே குரு. ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய கிரகமாகவும் குரு பார்க்கப்படுகிறார்.

குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி, பின்னர் அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படியாக 12 ராசிகளையும் சுற்றி வர அவருக்கு 12 ஆண்டுகள் ஆகும். இதுவே "குருப்பெயர்ச்சி" என்று அழைக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியில், குரு பகவான் மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி செய்யும் வீடு. அதிலும் குரு உச்சம் பெறுவதால் இந்த பெயர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ராஜயோகம், பணவரவு, திருமண யோகம், தொழில் முன்னேற்றம் கிடைக்கலாம். அதேசமயம் சில ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்.
குருவின் பார்வை படும் ராசிகளுக்கு பெரிய மாற்றங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் உச்சமாகி வருகிறார். மிகப்பெரிய யோக பலன்கள் கிடைக்கும். தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் வலுக்கும். 6, 8, 10 ஆம் இடங்கள் குருவின் பார்வையில் யோக பலன்களை கொடுக்கப் போகிறது. நல்ல கடன்கள் அமையும். வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவீர்கள். அந்த கடன்களை அடைப்பதற்கான வருமானங்கள் வரும். எதிலும் ஒரு நிறைவு ஏற்படும்.
குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் ஏற்படும். இளம்பெண்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். எல்லாவற்றையும் சிந்தித்து செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் நன்மைகள் உண்டாகும். தோழமைகள் நல்ல உறவுகளாக மாறக்கூடிய அமைப்பு உண்டு. வியாபாரிகள், தொழில் செய்வோருக்கு நல்ல வருமானங்கள் வரக்கூடும்.
ஆசிரியர் பணி, வழக்கறிஞர் துறைகளில் இருப்பவர்கள், பேச்சுத் துறையில் இருப்பவர்கள், நித்துறை, வங்கித் துறை, நீதித் துறையில் தொடர்புள்ளவர்களுக்கு அபரிமிதமான பண வரவு உண்டாகும். நியாயமான கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யும் அமைப்பு உள்ளது.
எல்லா வகையிலும் தொட்டது துலங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். சனி பகவான் 11 ஆம் இடத்திற்கு வருவதால் வரும் மூன்று, நான்கு வருடங்களுக்கு தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். வியாபாரம், தொழில் நன்றகா இருக்கும். குடும்பம் நன்றாக இருக்கக்கூடிய, குடும்பம் அமையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். அஷ்டமத்து சனியால் பட்ட துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட்டு முன்னேறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications