Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி: கஷ்டங்களில் இருந்து கன்னி ராசிக்கு விடுதலை.. பணத்தை கொட்டிக் கொடுக்க போகும் குரு

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Kanni

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் முதலில் வேலையை கவனமாக இருக்க வேண்டும். 10 ஆம் இடத்தில் குரு அமருவதால் இருக்கும் வேலையில் மாற்றம் தருவார். குரு அமர்ந்திருக்கும் இடம் காலபுருஷனுக்கு 3 ஆம் வீடு. கன்னி ராசி, லக்னத்தில் பிறக்கக்கூடிய சாஃப்ட்வேர் ஊழியர்கள், மீடியாவில் இருப்பவர்கள், டிராவல் தொடர்பான வேலையில் இருப்பவர்கள், ஆடிட்டர்களுக்கு வேலை மாறும்.

குருவின் பார்வை பலத்தின் மூலமாக 2, 4, 6க்குரிய பாவங்களை செயல்படுத்துவார். 2 ஆம் இடம் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கு குரு பார்வை உள்ளது. 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்துக்கும், 6 ஆம் இடம் வெற்றி ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் ஒரு திசையில் இருந்து பிரச்சனை வந்தாலும் 3 திசையில் இருந்து யோகம், பணம் வரும்.

குரு பார்க்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. குடும்பத்தில் அந்நியோன்யம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கன்னிக்கு 7 ஆம் இடத்தில் சனி அமருவதால் பிராத்தியார் ஒருவர் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தேவையில்லாத ஆட்களை வீட்டுக்குள் விடாமல் இருப்பது நல்லது. கன்னி ராசியினருக்கு பொதுவாக நன்றாக உள்ளது. வேலையில் வரும் மாற்றத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேறு வேலையை மாற்றி 2 மாதங்களுக்குப் பின்னர் அனைவரிடமும் சொல்வது நல்லது.

ராசி, லக்னத்தில் இருந்து கேது கிளம்பி விரைய ஸ்தானத்துக்கு போவது என்பது பெரிய அதிர்ஷ்டமாகும். கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஒரு வருடமாக இருள் சூழ்ந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருப்பீர்கள். தேவையில்லாத சங்கடம், மன அழுத்தம், பெரியவர்களுக்கு புற்றுநோய், தற்கொலை எண்ணங்கள், மருத்துவ சிகிச்சை என பல்வேறு விஷயங்களில் சிக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். அதில் இருந்தெல்லாம் விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

சந்தோஷ ரீதியாக 100க்கு 80 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 95 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- வேத பாட சாலைகளில் உங்களால் ஆன படிப்பிற்குரிய புத்தகம், நோட்டு தானமாக வழங்குவது அமோகமான பலன்களைத் தரும். அல்லது வேத பாட சாலையில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பென்சில், ஒரு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்தாலே நல்ல மகிழ்ச்சியைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+